Jul 5, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது: ஐவர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

போலீஸ் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது: ஐவர் உயிர் தப்பினர்

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.10-

அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, ஜோகூர், கெலாங் பாத்தா, சுங்கை பூலாய் அருகில் இன்று விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஐவரும் உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் படையின் ஏஎஸ்355என் வகையைச் சேர்ந்த அந்த ஹெலிகாப்டர், கேப்டன் உட்பட ஐவருடன் ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள தஞ்சோங் கூப்பாங்கிலிருந்து காலை 9.51 மணிக்கு புறப்பட்டது.

காலை 10.25 மணியளவில் மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவின் படகுத் துறையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் தெரிவித்தார்.

பலமுனை அணுசக்தி பாதுகாப்புக் கண்காணிப்புப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

கடற்பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் அந்த ஐவரையும் கடல் சார் ரோந்துப் போலீசார் காப்பாற்றியுள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்காக அந்த ஐவரும் ஜோகூர் பாரு, சுல்தானா அமீனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களில் இருவரும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியிருக்கின்றனர். அவர்கள் சற்று ஆபத்தான நிலைமையில் இருப்பதாக ஐஜிபி தெரிவித்தார்.

இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள விமான விபத்து விசாரணைப் பிரிவு, தனது விசாரணையை முடுக்கி விடும் என்று பொது வான் போக்குவரத்து இலாகா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது