கட்டொழுங்குப் பிரச்னை காரணமாக அரச மலேசிய போலீஸ் படையில் இவ்வாண்டில் முதல் ஐந்து மாத காலக் கட்டத்தில் 34 போலீஸ்காரர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகாரிகளும் அடங்குவர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உயர்நெறி இலாகா இயக்குநர் டத்தோ செரி அஸ்ரி அஹ்மாட் தெரிவித்தார்.
கட்டொழுங்குப் பிரச்சனை காரணமாக இக்காலக் கட்டத்தில் 496 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 34 பேர் போலீஸ் படையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்று அஸ்ரி அஹ்மாட் குறிப்பிட்டார்.
ஒழங்கு நடவடிக்கைக்கு ஆளாகி தற்போது தொடர்ந்து சேவையில் உள்ள போலீஸ்காரர்களுக்கு எதிராக எச்சரிக்கை, அபராதம், பதவி உயர்வு நிறுத்தம், சம்பள உயர்வு நிறுத்தம், சம்பளக்குறைப்பு, பதவி இறக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


