Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மஸ்ஜிட் ஜாமெக் பகுதியில் ‘ஓப் குத்திப்’ நடவடிக்கை: 31 பேர் கைது
தற்போதைய செய்திகள்

மஸ்ஜிட் ஜாமெக் பகுதியில் ‘ஓப் குத்திப்’ நடவடிக்கை: 31 பேர் கைது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.12-

மஸ்ஜிட் ஜாமெக் பகுதியில் நேற்று இரவு கோலாலம்பூர் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 7.20 மணியளவில், சுமார் 25 அதிகாரிகளுடன், ‘ஓப் குத்திப்’ என்ற அமலாக்க நடவடிக்கையானது மஸ்ஜிட் ஜாமெக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நடத்தப்பட்டதாக அதன் இயக்குநர் வான் முகமட் ஸைனி வான் யுசோஃப் தெரிவித்தார்.

எல்ஆர்டி நிலையங்கள், தெருமுனைகள் உள்ளிட்ட பகுதிகளில், சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித் திரிந்த 60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் 31 பேரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால், குடிநுழைவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அவர்கள் அனைவரும், புக்கிட் ஜாலில் குடிநுழைவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வான் யுசோஃப் தெரிவித்துள்ளார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு