Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பத்து டுவா ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகம் பிரச்னை: உள்துறை அமைச்சு பிரச்னை எழுப்ப இல்லை
தற்போதைய செய்திகள்

பத்து டுவா ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகம் பிரச்னை: உள்துறை அமைச்சு பிரச்னை எழுப்ப இல்லை

Share:

சுங்கை பட்டாணி, செப்டம்பர்.22-

கெடா சுங்கை பட்டாணியில் அமைந்துள்ள பத்து டுவா ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் நடப்புப் பிரச்னைக்கு செயற்குழு உறுப்பினர்கள் காரணமே தவிர உள்துறை அமைச்சு அல்ல என்று மலேசிய இந்து சங்கத்தின் கெடா மாநில பேரவைத் தலைவர் தலைவர் பரமசிவன் தெளிவுபடுத்தினார்.

ஆலய நிர்வாக உறுப்பினர்களிடையே உள்ள பிரச்னைக்கு அரசியல் முலாம் பூச வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பத்து டுவா ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாக பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் சங்கங்களின் பதிவு அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் 32 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது . 150 உறுப்பினர்களில் 132 பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, புதிய செயலவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல், கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கெடா மாநில இந்து சங்கத்தின் அலுவலகத்தில் நடத்தப்பட்டது .

வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களுக்கு எதிராக எந்தவோர் எதிர்ப்பும் வராததால் வேட்புமனுத் தாக்கல் செய்த கார்த்திக்கேசு தலைமையிலான நிர்வாகக் குழுவினரே போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டதாக பரமசிவன் அறிவித்ததுடன் நற்சான்றிதழையும் வழங்கினார்.

அதன்படி ஆலயத்தின் ஆண்டுக் கூட்டமும் எவ்வித பிரச்னையின்றி சுமூகமாக நடைபெற்றதாக பரமசிவன் குறிப்பிட்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்