இஸ்லாத்திலிருந்து வெளியேறுவதற்கு தாம் மேற்கொண்டுள்ள சட்டப் போராட்டதை சீராய்வு செய்யுமாறு மாது ஒருவர் செய்து கொண்ட விண்ணப்பத்தை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அந்த மனுவை சீராய்வு செய்வதற்கான அதிகாரத்தை சிவில் நீதிமன்றம் கொண்டிருக்கவில்லை என்றும்,அதற்கான அதிகாரத்தை ஷரியா நீதிமன்றம் கொண்டுள்ளது என்றும் கூறி, அந்த மாதுவின் விண்ணப்பத்தை அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இஸ்லாம் மதத்தின் சட்ட அம்சங்கள் தொடர்புடைய அனைத்து விவகாரங்களையும் கையாளும் அதிகாரம் ஷரியா நீதிமன்ற்தின் கீழ் உள்ளதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அஸிஸா நவாவி தமது தீர்ப்பில் தெரிவித்தார். முஸ்லிம் தந்தைக்கு பிறந்தாலும், தாம் சொந்த மதத்தை தேர்வு செய்து கொள்வதற்க தமது தாயார் அனுமதி தந்து இருப்பதால், இஸ்லாம் சமயத்திலிருந்து வெளியேறப் போவதாக சம்பந்தப்பட்ட மாது கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


