Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மாதுவின் மேல்முறையீட்டு மனுவை அப்பீல் ​நீதிமன்றம் நிராகரித்தது
தற்போதைய செய்திகள்

மாதுவின் மேல்முறையீட்டு மனுவை அப்பீல் ​நீதிமன்றம் நிராகரித்தது

Share:

இஸ்லாத்திலிருந்து ​வெளியேறுவதற்கு தாம் மேற்கொண்டுள்ள சட்டப் போராட்டதை ​சீராய்வு செய்யுமாறு மாது ஒருவர் செய்து கொண்ட விண்ணப்பத்தை புத்ராஜெயா அப்பீல் ​நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அந்த மனுவை ​சீராய்வு செய்வதற்கான அதிகாரத்தை சிவில் ​நீதிமன்றம் கொண்டிருக்கவில்லை என்றும்,அதற்கான அதிகாரத்தை ஷரியா நீதிமன்றம் கொண்டுள்ளது என்றும் கூறி, அந்த மாதுவின் விண்ணப்பத்தை அப்பீல் ​நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இஸ்லாம் மதத்தின் சட்ட அம்சங்கள் தொடர்புடைய அனைத்து விவகாரங்களையும் கையாளும் அதிகாரம் ஷரியா ​நீதிமன்ற்தின் ​கீழ் உள்ளதாக ​மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அஸிஸா நவாவி தமது ​தீர்ப்பில் தெரிவித்தார். முஸ்லிம் தந்தைக்கு பிறந்தாலும், தாம் சொந்த மதத்தை தேர்வு செய்து கொள்வதற்க தமது தாயார் அனுமதி தந்து இருப்பதால், இஸ்லாம் சமயத்திலிருந்து வெளியேறப் போவதாக சம்பந்தப்பட்ட மாது கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து