டெங்கில், பிப்ரவரி.15-
அனைத்துலக ஊடகத்தின் பங்குகள் தொடர்பான அவதூறு குற்றச்சாட்டுகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி ஏற்கனவே காவற்படையைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். தனது நிதி நிலைமை தொடர்பாகவும் ஒப்பந்தக் குறிப்புகள் தொடர்பாகவும் தேவையான அனைத்து ஆவணங்களையும் விரைவில் காவற்படையிடம் ஒப்படைக்க உள்ளதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தான் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும், உண்மைக்குப் புறம்பான ஊகங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்ட அவர், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.








