பாகிஸ்தானுக்கான தனது அதிகாரப்பூர்வ பணிப் பயணத்தின் நிறைவாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி-யை இஸ்லாமாபாத்தில் சந்தித்தார்.
பாதுகாப்பு, போலீஸ் துறை ஒத்துழைப்பு, எல்லை நிர்வாகம் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பது உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சைஃபுடின் விளக்கினார்.

எதிர்கால ஒத்துழைப்புக்கு அடித்தளமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான விமானத் தொடர்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக சைஃபுடின் தெரிவித்தார்.








