பள்ளி விடுமுறை மற்றும் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கே.டி.எம்.பி, வடக்கு பகுதிக்கான வழித்தடத்திற்கு எட்டு கூடுதல் கே.டி.எம் கொம்யூட்டர் ரயில் சேவைகளை இயக்குகிறது.
பட்டர்வொர்த்–பாடாங் பெசார்–பட்டர்வொர்த் வழித்தடத்தில், ஆகஸ்ட் 27 முதல் 31ஆம் தேதி வரை இந்தச் சிறப்பு சேவை அமலில் இருக்கும்.
இதன் மூலம், தினசரி ரயில் சேவைகளின் எண்ணிக்கை 38-லிருந்து 46 ஆக அதிகரிக்கிறது. பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட 30 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் கூடுதலாக 5,000 பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் இந்தச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாட்களில் மொத்தம் 25,000 கூடுதல் பயணிகளுக்கு வசதி கிடைக்கும் என கே.டி.எம்.பி தெரிவித்துள்ளது.
பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை எளிதாக்கும் இந்தச் சேவை, விடுமுறைக் கால நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கே.டி.எம்.பி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








