வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டத்தில், ஜோகூர் மாநிலத்தின் எனும் ஜே.எம்.எஃப் துணை இராணுவப் படை முதல் முறையாக பங்கேற்கிறது.
இந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இது அமையும் என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
100 வீரர்களையும் படை உபகரணங்களையும் கொண்ட ஜே.எம்.எஃப் அணிவகுப்பு, இந்த ஆண்டின் கொண்டாட்டத்திற்கு புதிய வண்ணம் சேர்க்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கடந்த ஆண்டுகளைப் போல ராணுவ மற்றும் போலீஸ் வாகனங்கள் அணிவகுப்பு பாதையோரத்தில் நிலையாக காட்சிப்படுத்தப்படாது. மாறாக, பொதுமக்கள் அருகில் சென்று பார்வையிடும் வகையில், அவை புத்ராஜெயாவில் உள்ள மொனுமென் ஆலஃப் பாரு பகுதியில் அமைக்கப்படும்.
இதனிடையே, தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தற்போது 70 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார்.
அதேவேளையில், மனித கிராஃபிக் நிகழ்ச்சிக்காக சிலாங்கூரைச் சேர்ந்த 36 பள்ளிகளின் 1,500 மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தகவல் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங்- குடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி மேற்கண்டவாறு கூறினார்.








