Aug 24, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாம் படிவ மாணவர் மரணம் — பகடிவதை செய்யப்பட்டாரா? 92 பேரிடம் வாக்குமூலம்
தற்போதைய செய்திகள்

இரண்டாம் படிவ மாணவர் மரணம் — பகடிவதை செய்யப்பட்டாரா? 92 பேரிடம் வாக்குமூலம்

Share:

கோலாலம்பூரில் இரண்டாம் படிவ மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், அவர் பள்ளியில் பகடிவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி காலை, மாணவியின் தாயார் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வங்சா மாஜூ மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.

இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 92 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.

ஒருவரை அச்சுறுத்துதல் அல்லது பகடிவதை செய்தல் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 507B பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் குறித்து பொதுமக்கள் ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும், தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

இரண்டாம் படிவ மாணவர் மரணம் — பகடிவதை செய்யப்பட்டாரா? 92 ப... | Thisaigal News