Mar 15, 2026
Thisaigal NewsYouTube
மாணவனின் பகடிவதை விசாரணை விரைவில் முடிவடையும்
தற்போதைய செய்திகள்

மாணவனின் பகடிவதை விசாரணை விரைவில் முடிவடையும்

Share:

கோலாலம்பூர், ஜன - 8

தங்கும் வசதி கொண்ட பள்ளியில் பகடிவதை காரணமாக மாணவர் ஒருவர் பள்ளி விடுதியிலிருந்து தப்பி சென்ற சம்பவ தொடர்பான விசாரணை விரைவில் போலீஸ் முடிவடையவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரையில் பகடிவதையால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களை உட்பட 35 நபர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் காவல்துறை அதிகாரி டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் கூறினார்.

விசாரணையில் அம்மாணவருடைய பெற்றோரின் கருத்துக்கள் எதுவும் புறக்கணிக்கப்படவில்லை என்று அல்லவுடீன் விவரித்தார்.

இவ்வாரம் போலீஸ் விசாரணை ஆவணங்களை துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுவதற்கும் முன் இன்னும் சில நபர்களிடமிருந்து வாக்குமூலம் பெறவுள்ளதாக அல்லவுடீன் தெரிவித்தார்.

Related News