Mar 12, 2026
Thisaigal NewsYouTube
நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை காலத்தை 6 நிமிடங்களாகக் குறைக்கிறது வானிலை ஆய்வு மையம்
தற்போதைய செய்திகள்

நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை காலத்தை 6 நிமிடங்களாகக் குறைக்கிறது வானிலை ஆய்வு மையம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

பேரிடர் தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில், நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கைகளை வழங்கும் காலத்தை 8 நிமிடங்களில் இருந்து 6 நிமிடங்களாகக் குறைக்க மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாட்டின் ஆரம்ப கால எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த, வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை 82 விழுக்காட்டிலிருந்து 85 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Arthur Joseph Kurup தெரிவித்தார்.

பேரிடர் தயார்நிலையை உறுதிச் செய்ய, வானிலை ஆய்வு மையம் 24 மணி நேரமும் இயங்கி வருவதோடு, கூட்டரசு மற்றும் மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை முகமைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

வானிலை எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துவதற்காக புதிய ராடார் மற்றும் முன்னறிவிப்புத் திட்டங்கள் உட்பட அரசாங்கம் 242 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. மேலும், தேசிய சுனாமி எச்சரிக்கை அமைப்பை உருவாக்க 13-வது மலேசியத் திட்டத்தின் கீழ் 18 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று Arthur Joseph Kurup குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!