நிபோங் தேபால், ஜூலை 03-
அம்னோ தனது முன்னாள் உறுப்பினர்களுக்கு மீண்டும் கதவுகளை திறந்துள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் உச்சமன்ற உறுப்பினரும், முன்னாள் பொருளாதார விவகாரப்பிரிவு அமைச்சருமான முஸ்தபா முகமது உட்பட முன்னாள் உறுப்பினர்கள் அனைவருக்கும் அம்னோ தனது கதவை திறந்துள்ளதாக துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு மீண்டும் தாய் கட்சியில் இணையவிருக்கின்றவர்களை ஏற்றுக்கொள்வதற்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் மற்றும் கட்சியின் அரசியல் பிரிவு உரிய அனுமதியை வழங்கும் பட்சத்தில் அவர்களை கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.








