கோலாலம்பூர், அக்டோபர் 06-
நாட்டின் தேசிய மொழியான மலாய்மொழியின் பயன்பாட்டை குறைத்துமதிப்பிட்டு, ஆங்கில மொழியை உயர்த்திப்பிடிக்கும் தரப்பினரை பிரதமர் டத்தோஸ்ரீஅன்வார் இப்ராஹிம இன்று கண்டித்ள்ளார்.
ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றால்மட்டுமே வெற்றிப் பெற முடியும் என்ற எண்ணம் கொண்டிருக்கும்அத்தரப்பினரின் அணுகுமுறை தவறானதுஎன்று குறிப்பிட்ட அன்வார், அவர்கள் லண்டனில்வளர்ந்திருக்கலாம், ஆனால்,அவர்கள் வசிப்பது மலேசியாவில் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர் நினைவுறுத்தினார்.
அனைத்து மலேசியர்களின்விருப்பத்தையும் ஆசைகளையும் அவர்கள்பிரதிநிதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தேசிய அளவிலான 2024-ஆம்ஆண்டு தேசிய மொழி மாதத்தை தொடக்கிவைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மலாய்மொழியை வலுவூட்டுவதற்கானநிலைப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் நமது மக்கள்
மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கேட்டுக் கொண்டார்.








