May 16, 2026
Thisaigal NewsYouTube
தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்றதாக மகன் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்றதாக மகன் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

சொத்து தகராற்றில் ஏற்பட்ட அதிருப்தியில் தனது தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்றதாக ஆடவர் ஒருவர், இன்று கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

25 வயது ஷாஹிர் முகமட் தஸ்னிம் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் எஸ். அருண்ஜோதி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோலாலம்பூர், பண்டார் ஶ்ரீ பெர்மைசூரியில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் 62 வயது தனது தந்தை தஸ்னிம் நுர்டின் என்பவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டு காலம் சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த இளைஞர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்றதாக மகன் மீது குற்றச்சா... | Thisaigal News