ஷா ஆலாமில் நடைபெற்ற பாஸ் கட்சியின் விளக்க உரை நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு, சுங்கைப்பட்டாணியை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்கள், தஞ்சோங் மாலிம் அருகில் பெராங் கில் நிகழ்ந்த விபத்தொன்றில் உயிரிழந்தனர்.
நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான ஒரு வாகனத்தில் இருந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு தங்கள் காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு உதவ எத்தனித்த போது, அவர்களின் வாகனத்தை மற்றொரு வாகனம் மோதியது.
இதில் இருவர் சம்பவ இடத்திலேயே மண்ட வேளையில் மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.








