சிறைச்சாலைகளுக்கு தேவையான துணி விநியோக குத்தகை தொடர்பான நிர்வாகத்தில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் குற்றச்சாட்டை சிறைச்சாலை இலாகா இன்று மறுத்துள்ளது. சிறைச்சாலைகள் தொடர்புடைய அனைத்து குத்தகைகளும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப மின் டெண்டர் முறையில் மட்டுமே விடப்படுகிறது. குத்தகைக்கான வெளிப்படைத் தன்மையை காக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறைக்கான குத்தகை விவகாரத்தில் ல் உள்துறை அமைச்சர் சைபுடின் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று சிறைச்சாலை இலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு

ஆசிரியை மரணம்: ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கோரிக்கை வலுக்கிறது

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது


