சிறைச்சாலைகளுக்கு தேவையான துணி விநியோக குத்தகை தொடர்பான நிர்வாகத்தில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் குற்றச்சாட்டை சிறைச்சாலை இலாகா இன்று மறுத்துள்ளது. சிறைச்சாலைகள் தொடர்புடைய அனைத்து குத்தகைகளும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப மின் டெண்டர் முறையில் மட்டுமே விடப்படுகிறது. குத்தகைக்கான வெளிப்படைத் தன்மையை காக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறைக்கான குத்தகை விவகாரத்தில் ல் உள்துறை அமைச்சர் சைபுடின் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று சிறைச்சாலை இலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


