Mar 12, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

Share:

எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, பிளஸ் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து வழக்கத்தை விட 21 விழுக்காடு அதிகரித்து, உச்சக்கட்ட நாட்களில் சுமார் 2.3 மில்லியன் வாகனங்கள் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மார்ச் 18 முதல் 20 வரையிலும், பெருநாளுக்குப் பிறகு மார்ச் 27 முதல் 29 வரையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அந்நெடுஞ்சாலை நிறுவன நிர்வாக இயக்குநர் டத்தோ நிக் ஐரினா நிக் ஜாபர், அறிவுறுத்தினார். நெரிசலைக் குறைக்கவும் பயண நேரத்தைச் சேமிக்கவும், பிளஸ் நிறுவனம் பரிந்துரைக்கும் 'MyPLUS-TTA' டிஜிட்டல் பயண அட்டவணையைப் பின்பற்றுமாறும், வாகனங்களை முறையாகப் பராமரித்து பாதுகாப்பாக செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News