Mar 23, 2026
Thisaigal NewsYouTube
மனைவியை கொலை செய்த ஆடவர் சரண்
தற்போதைய செய்திகள்

மனைவியை கொலை செய்த ஆடவர் சரண்

Share:

பேரா, பத்து காஜாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தனது மனைவியை கொலை செய்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் இன்று பிற்பகலில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.

இக்கொலை தொடர்பில் இன்று பிற்பகல் 2 மணியளவில் கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து 36 வயதுடைய அந்த நபர், அக்கொலையை தாமே செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, போலீசாரிடம் சரண் அடைந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த கொடூர செயலுக்கு அந்த ஆடவர் பயன்படுத்திய கத்தி ஒன்றையும் போலீசார் மீட்டுள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் நீடித்து வந்த குடும்பப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இருவரும் விவகாரத்து செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அந்த ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்தப் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்ப்படுகிறது.

இக்கொலை தொடர்பில் கருத்துரைத்த பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன், இச்சம்பவத்திற்கு பின்னர் சம்பந்தப்பட்ட நபரே போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக வந்து, கொலை குறித்து தகவல் அளித்தாக குறிப்பிட்டார்.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை