May 26, 2026
Thisaigal NewsYouTube
3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்
தற்போதைய செய்திகள்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

Share:

கோலா திராங்கானு, செப்பாட் மிதவைச் சேமிப்பு மற்றும் சுமையிறக்கும் பகுதியில் பெட்ரோனாஸ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்த சம்பவத்தில், கடுமையான காயங்கள் காரணமாக அவர்கள் இறந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அம்மூவரில், 38 வயதான நிக் ஹஃபிஃபி அஸ்ரி அப் மஜித், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளையில், 28 வயதான ஃபைசுவான் ஹக்கிம் புஸ்தமாம் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயங்களாலும், 38 வயதானஅகமட் ஃபிக்ரி ஜகாரியா நீரில் மூழ்கி இறந்ததும் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக கோலா திராங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த மற்றொரு தொழிலாளியான 37 வயதான தவ்பிக் ருஸ்லான், கோல திரங்காணு சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து