பெர்சாத்து கட்சியின் நடப்பு மற்றும் முன்னாள் உறுப்பினர்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர், அக்கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் ஹம்சா ஜைனுடின் முன்னெடுத்து வரும் “ரீசெட்” இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வருவதாக கூறப்பட்டுள்ள தகவலை, மலாக்கா மாநில பெர்சாத்து கட்சி மறுத்துள்ளது.
இது குறித்து மலாக்கா மாநில பெர்சாத்து தகவல் பிரிவு தலைவர் ஹிஷாமுடின் அப்துல் கரீம் வெளியிட்டுள்ள தகவலில், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ரஹீம் தம்பி சிக் வெளியிட்ட இந்தக் கூற்று உண்மை நிலவரத்திற்கு முற்றிலும் நேர் எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய அரசியலில் தொடர்ந்து முக்கியத்துவம் பெற ரஹீம் தம்பி சிக் எடுக்கும் அவசரமான அரசியல் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
முன்னதாக, ரஹீம் தம்பி சிக் வெளியிட்டிருந்த தகவலில், பெர்சாத்து கட்சி மீதான நம்பிக்கை இழப்பு காரணமாக சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பெர்சாத்து உறுப்பினர்கள் ஹம்சா ஜைனுடினுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








