Aug 8, 2026
Thisaigal NewsYouTube
ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்
தற்போதைய செய்திகள்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

Share:

மலேசியர்கள் தங்களுக்கான அரசாங்க நிறுவனங்களின் இணையவழிச் சேவைகளை எளிதாகப் பயன்படுத்தும் வகையில், MyGOV மலேசியா செயலியில் செயற்கை நுண்ணறிவு முகவர் இணைக்கப்படவுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இலக்கவியல் சேவைகள் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் பொதுமக்கள் இலக்கவியல் மயமாக்கலின் பலன்களை எளிதாகப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை டாமன்சாரா டாமாயில் நடைபெற்ற மலேசிய இலக்கவியல் பயணம் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய கோபிந்த் சிங், தற்போதுள்ள தொழில்நுட்பத்தை நாம் கவனத்தில் கொண்டு, பயன்படுத்தும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் இன்றைய காலத்திற்கேற்ப இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

MyGOV மலேசியாவில் இணைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு முகவரானது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அரசாங்க சேவைகளை மேம்படுத்தும் சமீபத்திய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

சபா கிழக்குக் கடற்கரை பாதுகாப்பு: 2020 முதல் பணயக் கடத்தல் சம்பவம் இல்லை - உள்துறை அமைச்சர் தகவல்

சபா கிழக்குக் கடற்கரை பாதுகாப்பு: 2020 முதல் பணயக் கடத்தல் சம்பவம் இல்லை - உள்துறை அமைச்சர் தகவல்