பெட்டாலிங் ஜெயா, ஜூலை 06-
மலேசிய மனித உரிமை ஆணையமான Suhakam-மின் புதிய தலைவராக அப்பீல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோஹட் ஹிஷாமுடின் முகம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மோஹட் ஹிஷாமுடின்- னின் நியமனம் ஜுலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மூன்று வருட தவணைக்குரிய அவரின் நியமனத்தை மாமன்னர் அங்கீகரித்துள்ளதாக அரசாங்க தலைமைச் செயலாளர் தன் ஸ்ரீ ஸுகி அலி தெரிவித்துள்ளார்.
மோஹட் ஹிஷாமுடின், கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையில் சுஹகம்- மின் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.








