Mar 15, 2026
Thisaigal NewsYouTube
உலு லங்காட்டில் சட்டவிரோதமாகக் காடுகள் அழிப்பா? - விசாரணை செய்ய சிலாங்கூர் அரசு உத்தரவு
தற்போதைய செய்திகள்

உலு லங்காட்டில் சட்டவிரோதமாகக் காடுகள் அழிப்பா? - விசாரணை செய்ய சிலாங்கூர் அரசு உத்தரவு

Share:

கிள்ளான், டிசம்பர்.10-

உலு லங்காட் பத்து 18 பகுதியில் சட்டவிரோதமாகக் காடுகள் அழிக்கப்படுவது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யுமாறு, சிலாங்கூர் அரசாங்கம், சம்பந்தப்பட்ட துறைகளை அறிவுறுத்தவுள்ளது.

அப்பகுதியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு, காடுகள் அழிக்கப்படுவது ஒரு காரணமா என்பது குறித்து விசாரணை செய்ய, சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையும், வனத்துறையும் கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரமானது, நதி இருப்புகள் தொடர்பானதாக இருந்தால், நீர் பாசனத்துறையும், காடுகள் சம்பந்தப்பட்டதாக இருந்தால் வனத்துறையும் கையாளும் என்றும் அமிருடின் ஷாரி குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், சுங்கை லங்காட் இரண்டாம் கட்ட வெள்ளத் தணிப்புத் திட்டமானது முழுமையடையும் பட்சத்தில், அப்பகுதியில் வெள்ளப் பிரச்சினையானது தீர்க்கப்படும் என்றும் அமிருடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்