தாய்லாந்தின் நாராதிவாட் மாநிலம், தாக் பாய் மாவட்டத்தில் உள்ள முகிம் ப்ரை வான் பகுதியில் இன்று காலை 11.41 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இரண்டு மலேசியர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் பயணம் செய்த எஸ்.யு.வி ரக வாகனம் இந்த வெடிவிபத்தில் சிக்கியதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, புலனாய்வு மற்றும் தடயவியல் சோதனைகளுக்காக சபோம் சந்திப்பு முதல் கம்பங் சபா பகாரு வரையிலான தாக் பாய் மாவட்டச் சாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமட், மலேசிய மக்கள் தங்களின் தாய்லாந்து பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.








