சுபாங் ஜெயா,யுஎஸ்ஜே 14 பகுதியில் உள்ள நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
காலை 9.48 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததும், சுபாங் ஜெயா மற்றும் புச்சோங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 17 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்தத் தீ விபத்தில் முதல் மாடியில் உள்ள ஒரு வீட்டின் 80 விழுக்காட்டுப் பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
அங்கிருந்த 20 வயது மதிக்கத்தக்க வாடகைதாரர் ஒருவரும், நான்காவது மாடியில் அடர்ந்த புகைக்கு நடுவே சிக்கியிருந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று வெளிநாட்டினரும் தீயணைப்பு வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், காலை 10.12 மணியளவில் தீ முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.








