Jan 17, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வணிக வளாகங்களில் 217 சட்டவிரோதக் குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு வணிக வளாகங்களில் 217 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.17-

கோலாலம்பூர் தலைநகரைச் சுற்றியுள்ள இரண்டு வணிக வளாகங்களில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 217 சட்டவிரோதக் குடியேறிகள் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டனர்.

காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குழைவுத் துறை துணை இயக்குநர் டத்தோ லோக்மேன் எஃபெண்டி ரம்லி தெரிவித்தார்.

வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட கோலாலம்பூரில் உள்ள கோத்தாராயா (Kotaraya) வணிக வளாகம் மற்றும் சிலாங்கூரில் உள்ள கேலக்ஸி அம்பாங் (Galaxy Ampang) ஆகியவற்றில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

"கைது செய்யப்பட்டவர்களில் 55 ஆண்கள் மற்றும் 162 பெண்கள் அடங்குவர். இவர்கள் இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ், இந்தியா, மியான்மர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

Related News

வேலையைத் தக்க வைக்க AI தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: சுங்கை பூலோவில் அமைச்சர் ரமணன் அறிவுறுத்தல்

வேலையைத் தக்க வைக்க AI தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: சுங்கை பூலோவில் அமைச்சர் ரமணன் அறிவுறுத்தல்

புயல் 'நோகேன்' (Nokaen) குறித்த எச்சரிக்கையை வெளியிட்டது மலேசிய வானிலை ஆய்வு மையம்

புயல் 'நோகேன்' (Nokaen) குறித்த எச்சரிக்கையை வெளியிட்டது மலேசிய வானிலை ஆய்வு மையம்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்: அம்னோ கோரிக்கை

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்: அம்னோ கோரிக்கை

உடல்பிடி நிலையத்தில் சிக்கிய தம்பதியர்: சோதனையைக் கண்டு ஊழியர்கள் ஓட்டம்

உடல்பிடி நிலையத்தில் சிக்கிய தம்பதியர்: சோதனையைக் கண்டு ஊழியர்கள் ஓட்டம்

ஆசியான் AI பாதுகாப்பு கட்டமைப்பின் செயலகம் கோலாலம்பூரில் அமைகிறது: அமைச்சர் கோபிந்த் சிங் யோ தகவல்

ஆசியான் AI பாதுகாப்பு கட்டமைப்பின் செயலகம் கோலாலம்பூரில் அமைகிறது: அமைச்சர் கோபிந்த் சிங் யோ தகவல்

கெரிஞ்சி எல்ஆர்டி ரயிலில் பெண் பயணிக்குப் பாலியல் தொல்லை: போலீசார் விசாரணை

கெரிஞ்சி எல்ஆர்டி ரயிலில் பெண் பயணிக்குப் பாலியல் தொல்லை: போலீசார் விசாரணை