Mar 18, 2026
Thisaigal NewsYouTube
SST உயர்வு, சாமானிய மக்களை பாதிப்பில் ஆழ்த்தும்
தற்போதைய செய்திகள்

SST உயர்வு, சாமானிய மக்களை பாதிப்பில் ஆழ்த்தும்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2 -

நேற்று மார்ச் முதல் தேதியிலிருந்து ஸ்.ஸ்.தி விற்பனை சேவை வரி, 6 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சில சேவைகளுக்கு வரியிலிருந்து நேரடி விலக்களிப்பு வழங்கப்பட்டாலும் இது, பிB40 மற்றும் ம்40 தரப்பைச் சேர்ந்த மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்று மசீச தலைவர் டத்துக் ஶ்ரீ வி கா சியோங் கூறுகிறார்.

ஒரு மாதத்திற்கு மணிக்கு 600 கிலோ வாட் அளவுக்கு குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஸ்.ஸ்.தி லிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்றாலும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2 விழுக்காடு அதிகரிப்பு என்பது பி40 மற்றும் ம்40 தரப்பைச் சேர்ந்த மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வீ கா சியோங் குறிப்பிடுகிறார்.

வர்த்தக நிறுவன​ங்கள், தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் கடைகள் ஆகியவற்றுக்கு 2 விழுக்காடு மின்சாரக் கட்டணம் உயரும் போது, அதனை ஈடுசெய்வதற்கு அவர்கள் தாங்கள் தயாரிக்கின்ற அல்லது விற்பனை செய்கின்ற பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும். பொருட்களின் விலை உயர்வினால் இது சாமானிய மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று முன்னாள் போக்குவர​த்து அமைச்சருமான வீ கா சியோங் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு