Dec 3, 2025
Thisaigal NewsYouTube
செயலி மூலமாக மோசடிக் கும்பலிடம் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்த பெண்!
தற்போதைய செய்திகள்

செயலி மூலமாக மோசடிக் கும்பலிடம் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்த பெண்!

Share:

குவாந்தான், செப்டம்பர்.30-

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, போலி முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் மோசடிக் கும்பலிடம் இழந்துள்ளார்.

51 வயதான அப்பெண்ணுக்கு, முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, மர்ம நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, அவர் செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில், அச்செயலி மூலமாக, மறைந்த தனது கணவரின் சேமிப்பு நிதி உட்பட, சுமார் 2 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல், மர்ம நபர் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளதாக பஹாங் காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதைத் தாமதமாக உணர்ந்த அப்பெண் போலீசாரின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்