பெண் குழந்தை ஒன்று சிறார் பராமரிப்பு மையத்தின் பணியாளரால் கடுமையாக நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பத்துகேவ்ஸ், தாமான் சமுதெராவில் வில் நிகழ்ந்ததாகும் என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்தெண்டன் நூர் அர்ஃபின் முகமட் நசீர் தெரிவித்துள்ளார். கடந்த மே 21 ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் அந்த குழந்தையின் உடலில் வீக்கங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அதன் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் அந்த சிறார் மையத்தின் குழந்தை பராமரிப்பாளரான 21 வயது பெண் கைது செய்யப்பட்டு, கடந்த மே 30 ஆம் தேதி செலாயாங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்று நூர் அரிஃபின் விளக்கினார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


