Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மைகாட் அட்டைக்கு விண்ணப்பித்த அந்நியப் பெண் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.27-

மலேசிய பிறப்பு சான்றிதழைப் பயன்படுத்தி மைகாட் அட்டையைப் பெறுவதற்கு முயற்சி செய்த அந்நிய மாது ஒருவர், தேசிய பதிவு இலாகாவினால் கைது செய்யப்பட்டார்.

சொந்த தொழில் நடத்தி வரும் இந்தோனேசியா, மேடானைச் சேர்ந்த அந்த மாது, மலேசியர் ஒருவருக்கு சொந்தமான பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி, மை கார்ட் அட்டைக்கு விண்ணப்பித்த போது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியதாக தேசிய பதிவு இலாகாவின் அமலாக்கப்பிரிவுத் தலைவர் காய்ரு பர்ஹாட் தெரிவித்தார்.

பகாங், குவாந்தான் கெம்பாடாங்கைச் சேர்ந்த அந்த இந்தோனேசிய மாது, குவாந்தான் தேசிய பதிவு இலாகா அலுவலகத்தில் கை கார்ட் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார்.

அந்த மாது போலி ஆவணங்களை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து நேற்று நடத்திய சோதனையில் அவர் கைது செய்யப்பட்டதாக காய்ரு பர்ஹாட் தெரிவித்தார்.

போலி ஆவணங்களை விற்பனை செய்யும் கும்பலிடமிருந்து அந்த மாது, 8 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மலேசியருக்கு சொந்தமான பிறப்புப் பத்திரத்தை விலைக்கு வாங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை