பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிற்கு ம.இ.கா விரைவில் பதிலளிக்கவில்லை என்றால், அவர்கள் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகவே கருதப்படும் என அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மார்ச் 23 அன்று ம.இ.கா-விற்கு அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. ம.இ.கா கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதியே கூட்டணியில் இணைய விண்ணப்பித்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகத் தக்கியுடின் கூறியுள்ளார்.
இருப்பினும், தாங்கள் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கவில்லை என்றும், தற்போது வரை பாரிசான் நேஷனல் கூட்டணியிலேயே நீடிப்பதாகவும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அண்மையில் திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்தார்.








