சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகள் மத்தியில் நிலவி வருவதாக கூறப்படும் லஞ்ச ஊழல் அமலாக்கம் குறித்து அம்பலப்படுத்தும் உரிமையும், கடமையும் அமைச்சர்களுக்கு உண்டு என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் தலைமை அணையர் தான் ஶ்ரீ அசாம் பாகி தெரிவித்தார். கடந்த வாரம் வியாழக்கிழமை கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன சுற்றுப்பயணிகள் கைது செய்யப்பட்டது தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், குடிநுழைவு அதிகாரிகள் மத்தியில் லஞ்ச ஊழல் நடப்பதாக
குற்றஞ்சாட்டியிருக்கும் சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங், லஞ்ச ஊழல் குறித்து குரல் எழுப்புவதற்கு உரிமையும் கடமையும் இருக்கிறது என்று அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.
லஞ்ச ஊழல் எங்கு நடந்தாலும் அதனை கண்டும் காணாததுமாக இருந்திட முடியாது. அமைச்சர் என்ற முறையில்தியோங் கிங் சிங், செயலை ஓர் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்தில் தாம் பார்ப்பதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


