May 27, 2026
Thisaigal NewsYouTube
36 குழுக்கள் கலந்து கொண்ட மகிழம்பூ வினோட் கிண்ண கால் பந்து போட்டி மகிழம்பூ கால் பந்து குழு வெற்றி பெற்றது
தற்போதைய செய்திகள்

36 குழுக்கள் கலந்து கொண்ட மகிழம்பூ வினோட் கிண்ண கால் பந்து போட்டி மகிழம்பூ கால் பந்து குழு வெற்றி பெற்றது

Share:

டிச. 23-

மகிழம்பூ இளைஞர் கால் பந்து சங்க ஏற்பாட்டில் மகிழம்பூ வினோட் கிண்ண கால்பந்துப் போட்டியில் மகிழம்பூ கால் பந்து B குழு வாகை சூடி 10 ஆயிரத்து 50 ரிங்கிட் பரிசை தட்டிச் சென்றது. ஈப்போவில் உள்ள தாமான் டாக்டர் சீனிவாசகம் மைதானத்தில் கடந்த டிசம்பர் 21 ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் நாட்டின் பல மாநிலத்தில் இருந்து 36 குழுக்கள் கலந்துக்கொண்டன.

வெற்றிப் பெற்றவர்களுக்கு வினோட் சகோதரி திருமதி ரேனுவும் அவரது கணவர் மதனும் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

நான்காவது ஆண்டாக நடைபெற்ற மகிழம்பூ வினோட் கால் பந்து கிண்ண கால் பந்துப் போட்டி கனத்த மழைக்கு மத்தியில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இப்போடியை மகிழம்பூ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சாவ் கம் பூன் இப்போட்டியை அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைத்ததுடன் இங்கு சிறப்பான முறையில் நடைபெற்ற இப்போட்டிக்கு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்

இப்போட்டிக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் அடுத்தாண்டு வெளிநாடுகளில் இருந்து குழுக்கள் இப்போட்டியில் கலத்துக்கொள்ள திட்டங்கள் வகுத்து வருவதாக மகிழம்பூ இளைஞர் கால் பந்து சங்க செயலாளர் தேவேயதிரன் சிவலிங்கம் தெரிவித்தார்

இப்போட்டியில் இண்டாவது நிலையில் OPIB கால் பந்து குழுவும் மூன்றாவது நிலையில் ,dream A குழுவும் வெற்றி பெற்று முறையே 5 ஆயிரம் ரிங்கிட்டையும் 2,500 ரிங்கிட்டையும் பரிசுத் தொகையாகப் பெற்றனர்.

மகிழம்பூ அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மான் ஆலயத் தலைவர் அழகர்சாமி பந்தை உதைத்து முத ஆட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் வினோட்டின் தாயார் திருமதி அமுத ராணிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன் இப்போட்டியில் பங்கேற்ற குழுக்கள் சிறப்பான முறையில் விளையாடி தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாக குறிப்பிட்டதுடன் இப்போட்டி விளையாட்டு சிறப்புடன் நடைபெற நன்கொடை வழங்கி ஆதரவு வழங்கிய அனைவருக்கும் , சங்க உறுப்பினர்கள் , மற்றும் விளையாட்டாளர்கள் அனைவருக்கும் தேவேந்திரன் நன்றியை கூறிக்கொண்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு