மலாக்கா, டிச.13-
மலாக்காவில் பொது இடங்களில் வைக்கப்படும் நன்கொடைப் பெட்டிகளை இலக்காக கொண்டு நாள் ஒன்றுக்கு சராசரி 250 ரிங்கிட்டை களவாடி வந்த கணவனுக்கும், மனைவிக்கும் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தலா 12 மாத சிறைத் தண்டனை விதித்தது.
33 வயது நூருடின் ஹஸ்புல்லா ஸைனால் மற்றும் அவரின் 35 வயது மனைவி சைய்டாதுல் நோர்நோர் சைஹிட்ரா பிர்டாவுஸ் ஆகியோர் மாஜிஸ்திரேட் நோர் சயாலியாத்தி முகமட் சோப்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.
இருவரும் தங்கள் வசம் 54 நன்கொடைப் பெட்டிகளை வைத்திருந்தது குறித்து விளக்கம் அளிக்கத் தவறிவிட்டனர்.








