மலேசிய ஊடகவியல் மன்றம் அதன் புதிய தலைவராக, கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டான் ஸ்ரீ நல்லினி பத்மநாதன்-னை ஒருமனதாக நியமித்துள்ளது. ஊடக சுதந்திரம், பொதுமக்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் பத்திரிகை தர்மத்தை மேம்படுத்துவதற்கான சட்டச் சீர்திருத்தங்கள், நடத்தை விதிகளை அமல்படுத்துதல் போன்ற முக்கியப் பணிகளில் இவரின் தலைமையின் கீழ் இந்த மன்றம் கவனம் செலுத்தவுள்ளது.
அனைத்துலக வழக்கறிஞர்கள் மன்றத்தின் நீதிபதிகள் ஆலோசனைக்குழுவின் உதவித் தலைவராக பதவி வகித்து வரும் நளினி பத்மநாபன், கட்டார் அனைத்துலக நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், கட்டார் நடுவர் மையத்தின் நீதிபதியாகவும், வர்த்தக நீதிமன்றத்தின் அனைத்துலக நிரந்த ஆலோசனை மன்றத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.








