#TangkapAzamBaki இயக்கம் தனது பெயரை #RCINOW என மறுபெயரிட்டுக்கொண்டு, நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் பரந்த ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை நோக்கித் தனது கவனத்தை மாற்றியுள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எமின் முன்னாள் தலைமை ஆணையர் மீதான சர்ச்சைகளுக்கு அப்பால், முறையான ஊழல் மற்றும் அரசியல் கட்டமைப்புகள் மீதான பெருநிறுவன செல்வாக்கு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான ஒரு புதிய கட்டத்தை இந்த மறுபெயரிடுதல் குறிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட வழக்குகளில் பொறுப்புக்கூறல் இல்லாததால் பொதுமக்களின் நம்பிக்கை சரிந்து வருவதாகக் கூறியுள்ள இவ்வியக்கம், பெருநிறுவன மாஃபியா கட்டமைப்புகள் மற்றும் முறையான ஊழல் குறித்து விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையத்தை அமைக்கக் கோரியுள்ளது.
மேலும், எஸ்.பி.ஆர்.எம் அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, ஜூன் 30 அன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் இந்த இயக்கம் தெரிவித்துள்ளது.








