நாடெங்கிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் தொடர்ந்து தங்குதடையின்றி கிடைப்பது உறுதிசெய்யப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அனைத்துலக எரிசக்தி நெருக்கடி காரணமாக மானியச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், 'எம்10' சிறப்புப் பணிக்குழு மற்றும் பெட்ரோனாஸ் நிறுவனத்துடனான கூட்டு முயற்சியால் ஜூன், ஜூலை மாதங்களுக்கான எரிபொருள் இருப்பு பாதுகாப்பான அளவில் உள்ளதாக உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான நிதிப் சுமையைக் குறைக்க, தகுதியான நபர்களுக்கு 'புடி மதானி' திட்டத்தின் கீழ் மானிய விலையிலான டீசல் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் டத்தோ அர்மிசான் குறிப்பிட்டார்.
அனைத்துலக நெருக்கடியால் சபா மற்றும் சரவாக்கில் மட்டும் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் டீசல் மானியம் RM1.4 பில்லியனை எட்டியுள்ள வேளையில், எரிபொருள் கடத்தல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க வெறும் அமலாக்கத்தை மட்டும் நம்பியிருக்காமல், 'எஸ்.கே.டி.எஸ்' போன்ற டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அரசாங்கம் வலுப்படுத்தி வருகிறது.








