கோத்தா பாரு, ஜூன்.21-
கிளந்தான் மாநிலம் கோத்தா பாருவுக்கு முதல் முறையாக தனியாக சென்ற 15 மற்றும் 16 வயதுடைய இரு இளம் பெண்கள் கடந்த மூன்று நாட்களாக மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 வயதான Nur Kaseh Nalisya Mohd Ramzul Nazrie மற்றும் அவரது 15 வயது உறவினர் Nor Syahzanani ஆகியோர், கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கம்போங் பாலோ பகுதியில் உள்ள தங்களது வீடுகளில் இருந்து புறப்பட்டு, இ-ஹெய்லிங் சேவையைப் பயன்படுத்தி கோத்தா பாருவுக்குப் பயணம் செய்துள்ளனர்.
அதன் பின்னர் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாததால், அவர்கள் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களைத் தேடும் பணியில் மாவட்ட போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், பொதுமக்கள் யாரேனும் இது குறித்துத் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை அணுகும் படியும் கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் அஸ்மீர் டாமிரி தெரிவித்துள்ளார்.








