மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் வரும் சனிக்கிழமையன்று பெருநாள் பண்டிகையைக் கொண்டாடுவார்கள் என்று, அரச முத்திரைக் காப்பாளர் தான் ஸ்ரீ சையத் டானியல் சையத் அகமது அறிவித்துள்ளார்.
இன்று மாலை நாடு முழுவதும் உள்ள 29 இடங்களில் பிறை பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஷவ்வால் மாதப் பிறை தென்படாததைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு, மலேசிய மாநிலங்களுக்கான பெருநாள் பண்டிகை நாள், வரும் மார்ச் 21-ஆம் தேதி சனிக்கிழமை, நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இன்று வியாழக்கிழமை தொலைக்காட்சி நேரலையில் சையத் டானியல் அறிவித்துள்ளார்.








