Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இபிஎப். லாப ஈவு, 6.3 விழுக்காடு அறிவிக்கப்பட்டு இருப்பது, மடானி அரசாங்கத்தின் வெற்றியை நிரூபிக்கிறது

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். தனது சந்தாதாரர்களுக்கு இன்று 6.3 விழுக்காடு லாப ஈவை அறிவித்து இருப்பதானது, மடானி அரசாங்கத்தின் வெற்றியை நிரூபிக்கிறது என்று ஊராட்சி மன்ற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

6.3 விழுக்காடு லாப ஈவு என்பது, வழக்கத்திற்கு மாறானதாகும். 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு இபிஎப். தனது சந்தாதாரர்களுக்கு மிக அதிகமான லாப ஈவு வழங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த தனது நிதி ஆண்டில் முதலீட்டு வருவாய் மட்டும் 74.46 பில்லியன் ரிங்கிட் என்று இபிஎப். அறிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 11 விழுக்காடு உயர்வாகும். அவ்வாண்டில் 66.99 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு வருமானத்தை இபிஎப் பதிவு செய்து இருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மிகப் பெரிய நிதி அமைப்பைக் கொண்டுள்ள தொழிலாளர்களின் அந்திம கால சேமிப்புப் பணத்தை நிர்வகித்து வரும் இபிஎப். தனது சந்தாதாரர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் லாப ஈவை அறிவித்து இருப்பது மூலம் நாட்டின் பொருளாதாரம் சரியான தடத்தில் உள்ளது என்பதை நிரூபிக்கிறது என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு