அலோர் செட்டார் , செப்டம்பர் 8-
கெடா, கூலிம் வட்டாரத்தில் பெய்த கனத்த மழையைத் தொடர்ந்து 12 குடும்பங்களைச் செர்ந்த 48 பேர் பாதிக்கப்பட்டனர்.நேற்றிரவு தங்கள் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துக் கொண்டதைத் தொடர்ந்து 12 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டு வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கம்போங் சுங்கை செலுவாங் அத்தஸ் மற்றும் கம்போங் சுங்கை செலுவாங் பவாஹ் ஆகிய கிராமங்களைச் செர்ந்த இந்த 12 குடும்பங்களும் மஸ்ஜிட் சுங்கை செலுவாங் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது தற்காப்புப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது .








