Jul 2, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க அதிபருக்கு விடுத்த அழைப்பை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்
தற்போதைய செய்திகள்

அமெரிக்க அதிபருக்கு விடுத்த அழைப்பை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.27-

அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை வெளிப்படையாக ஆதரித்து, செயல்படுத்தி வருவதால் டிரம்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை பிரதமர் அன்வார் ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் துன் மகாதீர் கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரத்தில் மலேசியா அமைதியாக இருந்து விட முடியாது என்பதை வலியுறுத்திய துன் மகாதீர், அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் செய்து வரும் அட்டூழியங்களுக்கு எதிராக உறுதியான மற்றும் வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்குமாறு பிரதமர் அன்வாரையும், அவரின் தலைமையிலான அரசாங்கத்தையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்