Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்க அதிபருக்கு விடுத்த அழைப்பை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்
தற்போதைய செய்திகள்

அமெரிக்க அதிபருக்கு விடுத்த அழைப்பை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.27-

அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை வெளிப்படையாக ஆதரித்து, செயல்படுத்தி வருவதால் டிரம்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை பிரதமர் அன்வார் ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் துன் மகாதீர் கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரத்தில் மலேசியா அமைதியாக இருந்து விட முடியாது என்பதை வலியுறுத்திய துன் மகாதீர், அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் செய்து வரும் அட்டூழியங்களுக்கு எதிராக உறுதியான மற்றும் வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்குமாறு பிரதமர் அன்வாரையும், அவரின் தலைமையிலான அரசாங்கத்தையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்