Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போக்குவரத்து சம்மன்கள் கட்டத் தவறிய 2 மில்லியன் வாகனமோட்டிகள் பிளாக்லிஸ்ட் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர் - ஜேபிஜே அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து சம்மன்கள் கட்டத் தவறிய 2 மில்லியன் வாகனமோட்டிகள் பிளாக்லிஸ்ட் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர் - ஜேபிஜே அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

பல்வேறு சாலைப் போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள சம்மன்களைக் கட்டத் தவறியதற்காக சுமார் 2 மில்லியன் வாகனமோட்டிகள் பிளாக்லிஸ்ட் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர்.

இவ்வாண்டு ஜனவரி முதல் தற்போது வரை, 2 மில்லியனுக்கும் அதிகமான வாகன மோட்டிகளுக்கு அவாஸ் சம்மன்கள், நோட்டீஸ் 114 மற்றும் நோட்டீஸ் 115 ஆகியவற்றின் கீழ் சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜேபிஜே அமலாக்க இயக்குநர் டத்தோ முகமட் கிஃப்லி மா ஹசான் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் சம்மன்களைக் கட்டத் தவறினால் கூடுதலாக 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், சம்மன்களைச் செலுத்த நினைப்பவர்கள் தற்போது வழங்கப்பட்டு வரும், 150 ரிங்கிட் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2025 ஜனவரி மாதம் தொடங்கிய இச்சலுகை, இவ்வாண்டு இறுதி வரை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்