Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கிழக்குக் கரை மாநிலங்களில் இடைவிடாத மழை

Share:

கோலாலம்பூர், மார்ச். 08-

தீபகற்பத்தின் கிழக்குக் கரை மாநிலங்கள் குறிப்பாக கிளந்தானிலும் திரங்கானுவிலும் இம்மாதம் 12 ஆம் தேதி வரை இடைவிடாத மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமை வரை வீசும் என எதிர்பார்க்கப்படும் கிழக்கு திசைக் காற்றின் காரணமாக அந்நிலை காணப்படும் என மலேசிய வானிலை ஆய்வுத்துறை தலைமை இயக்குனர் முகமட் ஹிஷாம் முகமட் ஆனிப் தெரிவித்தார்.

MetMalaysia வானிலை நிலவரத்தைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதோடு இடைவிடாத மழை எச்சரிக்கையை விடுக்கும். மார்ச் 11 ஆம் தேதி வரை தென் சீனக் கடலில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் காணப்படும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

Related News