Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மஇகா தொடர்ந்து அவமானப்படுவதை விட விலக வேண்டும்
தற்போதைய செய்திகள்

மஇகா தொடர்ந்து அவமானப்படுவதை விட விலக வேண்டும்

Share:

ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகா தொடர்ந்து அவமானப்படுவதைவிட பாரிசான் நேஷனலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மஇகா சிலாங்கூர் மாநில தகவல் பிரிவுத் தலைவர் பி.ஏ. அவ்தார் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உலக வாணிப மையத்தில் நடைபெற்ற ஒற்றுமை அரசாங்கத்தின் தேசிய மாநாட்டில் உரையாற்றுவதற்கு மஇகாவிற்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து மாநாட்டிற்கு தலைமையேற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட்ஜாஹிட் ஆகியோரை கடுமையாக விமர்சித்து அவ்தார் சிங் காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார்.

மாநாட்டில் ம.சீ.ச. உட்பட யார் யாருக்கோ உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மஇகாவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை, இதுதான் ஒற்றுமை அரசாங்கமா? என்று மஇகா பூச்சோங் தொகுதி தலைவருமான அவ்தார் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

மஇகாவை, சாலையோரத்தில் சுற்றித் திரியும் நாய்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? என்று பொங்கி எழுந்த அவ்தார் சிங், இப்படி அவமானப்பட்டு கொண்டு இருப்பதைவிட மஇகாவை ஒரேடியாக வெளியேற்றி விடுவீர் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில் பாரிசான் நேஷனலிருந்து விலகு குறித்தும் கட்சியின் தலைமை பரிசீலிக்க வேண்டும் என்ற அவ்தார் சிங் கேட்டுக்கொண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு