ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக், வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மீண்டும் சென்னா சட்டமன்றத் தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பினாங்கு மாநிலத்திற்கு மாறத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜசெக மாநிலக் குழு மற்றும் மத்திய செயற்குழுவின் ஆதரவோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நெகிரி செம்பிலானில் கட்சி வசம் உள்ள 11 தொகுதிகளையும் தக்கவைத்து, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க முழு மூச்சுடன் செயல்படப் போவதாகவும் அந்தோணி லோக் உறுதியளித்துள்ளார்,
பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோ மற்றும் லிம் குவான் எங் இடையிலான உட்கட்சிப் பூசலைச் சமாளிக்க அந்தோனி லோக் பினாங்கிற்கு மாறுகிறார் என சீன ஊடகங்கள் முன்னதாகக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








