Jul 26, 2026
Thisaigal NewsYouTube
அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்

Share:

ஈப்போ, ஜூலை.26-

ஈப்போ மாநகர் மன்றத்தைச் சேர்ந்த அமலாக்க அதிகாரி ஒருவர், பணியில் ஈடுபட்டிருந்த போது தாக்கப்பட்டு மிரட்டப்பட்ட சம்பவத்திற்கு ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈப்போ மேயர் Zamakhshari Hanipah வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரி, அபராத நோட்டீஸ் வழங்கியதற்காக, அவரை பின்தொடர்ந்து தொந்தரவு செய்து நபர் ஒருவர், பின்னர் அதிகாரியை மிரட்டியதுடன், ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த அமலாக்க அதிகாரி, சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறை அடிப்படையில் தனது அதிகாரப்பூர்வ கடமையை மட்டுமே நிறைவேற்றியதாகவும் Zamakhshari குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையோ, மிரட்டலோ விடுப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News