கோலாலம்பூர் மாநகரில் மோனோரயில் இருப்புப்பாதையில் ராட்ஷச மரம் விழுந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில் இருப்புப் பாதையில் காத்திருக்கும் ஆபத்துகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளும்படி மோனோரயில், எல்.ஆர்.டி, எம்.ஆர்.டி போன்ற ரயில் சேவைகளை நிர்வகித்து வரும் Prasarana எனப்படும் Prasaranah Malaysia Berhad- நிறுவனத்தை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.
மரங்கள் சாயும் அபாயம் உட்பட இதர இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டிய சாத்தியமான பகுதிகளை, கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் இணைந்து Prasarana- இந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்கான அதிகாரம் ஊராட்சி மன்றம் மற்றும் தனியார் வீடமைப்பு துறையினருக்கு உட்பட்டு இருப்பதால் விருப்பம் போல் பராமரிப்பு நடவடிக்கைகளை Prasarana மேற்கொள்ள முடியாது.
எனவே முதலில் இது குறித்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.








