Dec 3, 2025
Thisaigal NewsYouTube
புடி 95 பயன்பாட்டு முறை, சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பானது
தற்போதைய செய்திகள்

புடி 95 பயன்பாட்டு முறை, சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பானது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

புடி 95 பெட்ரோல் விற்பனைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கட்டமைப்பு முறையானது, சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பானதாகும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்து இருப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

புடி 95 ஐ செயல்படுத்துவதில் கட்டமைக்கப்பட்ட அமைப்பு முறையானது, முழுக்க முழுக்க சைபர் பாதுகாப்பு அம்சம் பொருந்தியதாகும். எதிர்விளைவுகளைக் குறிப்பாக சைபர் தாக்குதல்களைத் துரிதமாக முறியடிக்கக்கூடிய அம்சங்கள் பொருத்தப்பட்ட நிலையில் நீடித்த ஆய்வுக்குப் பின்னரே பாதுகாப்பான கட்டமைப்பு முறை ஏற்படுத்தப்பட்டதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் மயமாக்கலின் அனைத்து அம்சங்களிலும் பிரதமர் அளித்திருந்த முன்னுரிமை பாதுகாப்பு அம்சமே. அந்த வகையில் புடி 95 திட்டத்திலும் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதீத முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் மலேசியா அனைத்துலக வர்த்தக கண்காட்சி மையத்தில் சைபர் டிஜிட்டல் சேவை பாதுகாப்பு மீதான ஆசியா கண்காட்சி மற்றும் மாநாட்டை அதிகாரப்பூர்மாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோபிந்த் சிங் இதனைக் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்