Mar 20, 2026
Thisaigal NewsYouTube
புடி 95 பயன்பாட்டு முறை, சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பானது
தற்போதைய செய்திகள்

புடி 95 பயன்பாட்டு முறை, சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பானது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

புடி 95 பெட்ரோல் விற்பனைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கட்டமைப்பு முறையானது, சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பானதாகும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்து இருப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

புடி 95 ஐ செயல்படுத்துவதில் கட்டமைக்கப்பட்ட அமைப்பு முறையானது, முழுக்க முழுக்க சைபர் பாதுகாப்பு அம்சம் பொருந்தியதாகும். எதிர்விளைவுகளைக் குறிப்பாக சைபர் தாக்குதல்களைத் துரிதமாக முறியடிக்கக்கூடிய அம்சங்கள் பொருத்தப்பட்ட நிலையில் நீடித்த ஆய்வுக்குப் பின்னரே பாதுகாப்பான கட்டமைப்பு முறை ஏற்படுத்தப்பட்டதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் மயமாக்கலின் அனைத்து அம்சங்களிலும் பிரதமர் அளித்திருந்த முன்னுரிமை பாதுகாப்பு அம்சமே. அந்த வகையில் புடி 95 திட்டத்திலும் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதீத முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் மலேசியா அனைத்துலக வர்த்தக கண்காட்சி மையத்தில் சைபர் டிஜிட்டல் சேவை பாதுகாப்பு மீதான ஆசியா கண்காட்சி மற்றும் மாநாட்டை அதிகாரப்பூர்மாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோபிந்த் சிங் இதனைக் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து